சேலம்: மோட்டார் சைக்கிள் லாரி நேருக்கு நேர் மோதல் - தந்தை,மகன் பலி

மோட்டார் சைக்கிள் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை ,மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம்: மோட்டார் சைக்கிள் லாரி நேருக்கு நேர் மோதல் - தந்தை,மகன் பலி
Published on

கெங்கவல்லி,

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 35).பெயிண்டர். இவரது மனைவி ஷகிலா(30).இவர்களது மகன் அப்துல் பாசித் (4). இவர்கள் கடந்த 2 வருடமாக மனைவியின் ஊரான தம்மம்பட்டியில் குடியிருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் கடம்பூரில் உள்ள தாத்தா பஷிர் முகமதுவை பார்க்க சதாம் உசேன் தனது மகன் அப்துல் பாஷித்துடன் வந்துள்ளார். அப்போது கிருஷ்ணாபுரம் அருகே பொங்காளியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது ஜல்லி ஏற்றி வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்ரார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் அப்துல் பாசித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பலத்த காயம் அடைந்த சதாம் உசேனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முருகன் (40) என்பவரை கைது செய்தனர்.மேலும் இறந்தவர்களின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com