மாணவி பாலியல் புகார்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது

மாணவியிடம் அத்துமீறிய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது செய்யப்பட்டார்.
மாணவி பாலியல் புகார்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது
Published on

சேலம்,

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி அளித்ததாக கூறப்படும் பாலியல் புகாரில், பொறுப்பு பதிவாளர் கோபி கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுமுறை தினத்தில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக வேதியியல் ஆராய்ச்சி மாணவி குற்றசாட்டியதாக கூறப்படுகிறது.மாணவியின் புகாரின்பேரில் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி மீது போலீசார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி மீது மாணவி பாலியல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com