சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறதுடியேற்றத்துடன் நாளை மறுநாள் தொடங்குகிறது
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தொடர்ந்து விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல் லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com