வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் முழுமையாக மீட்கப்படவில்லை

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் முழுமையாக மீட்கப்படவில்லை என பொன் மாணிக்க வேல் கூறினார்.
வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் முழுமையாக மீட்கப்படவில்லை
Published on

ராஜபாளையம், 

ராஜபாளையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள கோவில்களில் 3 லட்சம் சிலைகள் சட்டப்படி இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் முழுமையாக மீட்கப்படவில்லை. 10-ல் 1 சதவீதம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கோவில்கள் பராமரிப்பு செய்யாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவற்றை காப்பாற்றுவதற்காக சிவனடியார்களை ஒரே கொடையின் கீழ் கொண்டு வருவதற்காக முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com