

திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் போலீசார் டி.கீரனூர் பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை செய்தனர். அதில், மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டரின் உரிமையாளரான டி.கே.மண்டபம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாஸ்கர்(வயது 37) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.