கோவிலில் சங்காபிஷேகம்

கோவிலில் சங்காபிஷேகம்
கோவிலில் சங்காபிஷேகம்
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. ராமநாதபுரம் நகரில் புகழ்வாய்ந்த ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி மாதர் சங்கத்தின் சார்பில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் கோவில் வளாகத்தில் பிரம்மாண்டமான ஹரிஹரா கோலம் வரையப்பட்டிருந்தது. சங்காபிஷேகத்தில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com