மரக்கன்று நடும் விழா

கடையநல்லூரில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
மரக்கன்று நடும் விழா
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் சார்பில் கடையநல்லூர் மங்களாபுரத்தில் சிவன்மாரி ராணுவம் மற்றும் காவலர் தேர்வு பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ரோட்டரி கிளப் தலைவர் மயில் தலைமை தாங்கினார். ராணுவ பயிற்சி மைய நிறுவனர் சிவன்மாரி வரவேற்றார். ரோட்டரி கிளப் செயலாளர் இத்ரீஸ், ஓய்வு பெற்ற ஆசிரியர் கந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் டாக்டர் மீரான்மைதீன், முகமது கானித், முகமது இஸ்மாயில், செய்யது மைதீன், கருப்பசாமி மற்றும் 200 பயிற்சி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 100 மரக்கன்று நடும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com