ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக சரண்யா பொறுப்பேற்பு

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக சரண்யா பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக சரண்யா பொறுப்பேற்பு
Published on

கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த மதுபாலன் மதுரை மாநகராட்சி ஆணையாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அதற்கு பதிலாக கடலூர் மாவட்ட புதிய ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக கூடுதல் கலெக்டர் சரண்யா பொறுப்பேற்றார். அவருக்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும், மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com