சசிகலா அறிவுரைப்படி என்ற தம்பிதுரையின் பேச்சுக்குஅ.தி.மு.க எம்பிக்கள் எதிர்ப்பு

சசிகலா அறிவுரைப்படி ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு என்ற தம்பிதுரையின் பேச்சுக்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என அ.தி.மு.க எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
சசிகலா அறிவுரைப்படி என்ற தம்பிதுரையின் பேச்சுக்குஅ.தி.மு.க எம்பிக்கள் எதிர்ப்பு
Published on

அ.தி.மு.க எம்.பி கோ.அரி கூறியதாவது:- .

சசிகலா அறிவுரைப்படி ஆதரவு என தம்பிதுரை கூறியது தவறானது. தம்பிதுரையின் பேச்சுக்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. என கூறினார்.

அருண்மொழிதேவன் எம்பி கூறியதாவது:-

குடியரசுத் தலைவர் தேர்தல் ஆதரவு தொடர்பாக தம்பிதுரை கூறிய கருத்தால் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.அதிமுக இயக்கம், ராணுவ கட்டுப்பாட்டோடு நடத்தப்பட வேண்டும்.சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என முதலில் கூறியவர் தம்பிதுரை.தம்பிதுரையின் சொந்த கருத்துக்கள் முதலவருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com