தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த திட்டம்

ஆதிதிராவிட பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என அதிகாரி கூறினார்.
தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த திட்டம்
Published on

தமிழக அரசு, ஆதிதிராவிட பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த தமிழ்நாடு சிமெண்டு விற்பனை செய்யக்கூடிய முகவர்களாக அவர்களை நியமிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி இத்திட்டத்தில் 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராகவும் இதர கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யவும் தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. வயது 18 முதல் 65-க்குள் இருக்க வேண்டும். திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியம் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும். www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com