மாத்திரைகளை தின்று பள்ளிக்கூட மாணவி தற்கொலை

மாத்திரைகளை தின்று பள்ளிக்கூட மாணவி தற்கொலை செய்து கொண்டார்
மாத்திரைகளை தின்று பள்ளிக்கூட மாணவி தற்கொலை
Published on

சேலம் அம்மாபேட்டை நாயகர்காடு பகுதியை சேர்ந்தவர் சிவா. இவர் அங்குள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் மமதிஸ்ரீ (வயது13). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி அடிக்கடி செல்பேன் பார்த்துக்கொண்டு அதில் கேம் விளையாடி உள்ளார். இதை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்த மாணவி அதிக மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்தார். உறவினர்கள் மாணவியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மமதிஸ்ரீ நேற்று இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com