மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி பள்ளி மாணவர் சாவு

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி பள்ளி மாணவர் சாவு
Published on

கீரமங்கலம் அருகே சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். அரசு பள்ளி ஆசிரியர். இவரது மகன் மெகுல் (வயது 15). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பள்ளி விடுமுறைக்காக ஊருக்கு வந்த மெகுல் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தனது நண்பர் யுகராஜனுடன் சென்று கொண்டிருந்தார். கொத்தமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மெகுலை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com