பள்ளி மாணவர்கள் சாதனை

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான நுழைவுத்தேர்வில் அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ. பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
பள்ளி மாணவர்கள் சாதனை
Published on

மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக 'யஸஸ்வி' என்னும் கல்வி உதவித்தெகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவர்களை அடையாளம் காண்பதற்காக தேசிய அளவிலான நுழைவு தேர்வை நடத்தியது. இதில் பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர் கிஷோர் ஜான் மாநில அளவில் 2-வது இடத்தையும், மாரிச்செல்வம் 7-வது இடத்தையும், நிதிஷ் 6-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் மாணவர்கள் ரத்திகா, சீனிவாஸ்கவி வரதன், செல்வகவிதா, துர்கா, அகிலா, தனலட்சுமி, அரவிந்த் சித்தார்த், நித்யா, சுவேகா, பவன்ஸ், கோகுல் பிரசாத் ஆகியோர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று உதவித்தெகை பெற தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் ராஜசேகரன், முதல்வர் மகேஸ்வரி ராஜசேகரன், அகாடமி டைரக்டர் ராஜ்குமார், டாக்டர் அபிஷா ராஜ்குமார், துணை முதல்வர் சரளா ராமச்சந்திரன், உதவி துணை முதல்வர் பாகீரதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com