பள்ளி மாணவர்கள் சாதனை

கலைத்திறன் போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
பள்ளி மாணவர்கள் சாதனை
Published on

சுரண்டை:

சுரண்டை எஸ்.ஆர்.ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவர்கள் நெல்லையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் 74 பள்ளிகள் பங்கேற்றன. இதில் கலந்து கொண்ட சுரண்டை பள்ளி மாணவர்கள் தனி நடனம், குழு நடனம், ஓவியம் வரைதல், பானையில் ஓவியம் வரைதல், கோலப்போட்டி, தமிழ் பேச்சு போட்டி போன்றவற்றில் முதல் பரிசும், தமிழ் கட்டுரை போட்டி, ஆங்கில கட்டுரை போட்டி, குழு பாடலில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளனர்.

பள்ளி முழுமைக்கான 2-ம் பரிசையும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை குழல்வாய்மெழி அம்மாள் சிவன் நாடா அறக்கட்டளை நிறுவனா சிவபபிஸ்ராம், பள்ளி செயலா சிவடிப்ஜினிஸ்ராம், முதல்வா பென் மனேன்யா, தலைமை ஆசிரியா மாரிக்கனி மற்றும் பள்ளி ஆசிரியாகள் பாராட்டினா.

X

Daily Thanthi
www.dailythanthi.com