ஆற்றுப்பாலத்தில் பள்ளி மாணவர்கள் யோகாசனம்

ஆற்றுப்பாலத்தில் பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.
ஆற்றுப்பாலத்தில் பள்ளி மாணவர்கள் யோகாசனம்
Published on

ஆலங்குளம்:

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஸ்டஅக் பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்தனர். பள்ளி ஆசிரியர்கள் லிங்கேஸ்வரி மற்றும் ஜான்சன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். பள்ளி நிறுவனர் முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தலைவர் இசக்கி பாண்டியன், யோகா பயிற்சியாளர் கிருபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி மாணவர்கள் அனைவரும் யோகாசனம் செய்தனர். பள்ளி முதல்வர் பிரவின்குமார் யோகாசனம் செய்த மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள், பாதுகாப்பு வழங்கிய காவல் துறையினர் மற்றும் பேரூராட்சி மன்ற ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com