ஜனவரியில் பள்ளிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை - மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

ஜனவரி மாதத்தில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவ- மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்
சென்னை,
2025-26-கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்துள்ளது. மாணவர்கள் தற்போது அரையாண்டு விடுமுறையில் உள்ளனர். கடந்த 24-ந்தேதி தொடங்கிய அரையாண்டு விடுமுறை வருகிற ஜனவரி 4-ந் தேதியுடன் முடிவடைகிறது. 12 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 5-ந் தேதி பள்ளிகள் வழக்கம் போல் தொடங்கும்.
2026-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் புத்தாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு 11 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே ஜனவரி தொடக்கத்தில் 4 நாட்கள் விடுமுறையை மாணவர்கள் கழித்த நிலையில் 15-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகை விடுமுறை தொடங்குகிறது. 15-ந்தேதி பொங்கல், 16-ந்தேதி திருவள்ளுவர் தினம்,
17-ந் தேதி சனிக்கிழமை உழவர் தினம், ஞாயிறு விடுமுறை தினம் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. பின்னர் குடியரசு தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. ஜனவரி மாதத்தில் மட்டும் 11 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவ- மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த விடுமுறை அனைத்து அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






