சுட்டெரிக்கும் வெயில்... சென்னையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு

வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில், சென்னை மாநகர சாலைகளில் உள்ள 8 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்... சென்னையில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வாட்டி வதைத்து வருகிறது. கத்திரி வெயில் காலம் கடந்த 4-ந்தேதி தொடங்கிய பிறகு, மேலும் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகளுக்கு நிழல் தரும் வகையில், சென்னை மாநகர சாலைகளில் உள்ள 8 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலில் சிக்னல்களில் வாகன ஓட்டிகள் நிற்கும்போது, ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேவைப்படும் இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com