முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து

ஓட்டேரி அருகே முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
Published on

ஓட்டேரி அடுத்த எஸ்.வி.எம். நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் என்ற அலெக்ஸ் (வயது 22). நேற்று மாலை அதே பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தவரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினர். தகவலறிந்த தலைமைச் செயலக காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் கடந்த மாதம் 23-ந் தேதி அதே பகுதியில் உள்ள மாதா கோவில் தேராட்டத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக விக்னேஷ் தாக்கப்பட்டது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com