2 பேருக்கு அரிவாள் வெட்டு; தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு

விக்கிரமசிங்கபுரத்தில் மாடு முட்டியதில் ஏற்பட்ட பிரச்சினையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2 பேருக்கு அரிவாள் வெட்டு; தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு
Published on

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் மாடு முட்டியதில் ஏற்பட்ட பிரச்சினையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாடு முட்டியதில் பிரச்சினை

விக்கிரமசிங்கபுரம் மில் அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 70). விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கணேசன் (44). இவருக்கு சொந்தமான மாடு, முருகனின் வீட்டுக்கு சென்று, அவரை முட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் முருகன், கணேசனை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த கணேசன் அரிவாளால் முருகனை வெட்டினார்.

அரிவாள் வெட்டு

இதையடுத்து முருகனும் அரிவாளால் கணேசனை வெட்டினார். இதற்கு துணையாக முருகன் மகன் மாரிமுத்து (40) இருந்ததாக கூறப்படுகிறது. இதில் காயமைடைந்த முருகன் அம்பை அரசு மருத்துவமனையிலும், கணேசன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். இதுதொடர்பாக முருகன், அவரது மகன் மாரிமுத்து மற்றும் கணேசன் ஆகிய 3 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com