பூ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

பூ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
பூ வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
Published on

திருச்சி திருவானைக்காவல் சிங்கபெருமாள் கோவில்தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 37). இவர் ஸ்ரீரங்கம் மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை மாணிக்கம்பிள்ளை தெரு அருகே கதிர்வேல் சென்றபோது, அவரை சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு கையில் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த கதிர்வேலை அப்பகுதி மக்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com