மனைவியின் கள்ளக்காதலனுக்கு அரிவாள் வெட்டு

ஆட்டையாம்பட்டி அருகே மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய தறித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மனைவியின் கள்ளக்காதலனுக்கு அரிவாள் வெட்டு
Published on

பனமரத்துப்பட்டி:-

ஆட்டையாம்பட்டி அருகே மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய தறித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்காதல்

சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள பூலாவரி அக்ரஹாரம் சின்ன ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 48). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (45). இந்தநிலையில் மல்லிகா கணவரை பிரிந்து ராஜபாளையம் அரிமா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

ஆட்டையாம்பட்டி அருகே உள்ள எஸ்.பாப்பாரப்பட்டி சோலை கவுண்டர் காடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் முருகேசன் (45) என்பவருடன் மல்லிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

அரிவாள் வெட்டு

இதனிடையே தனது மனைவி மல்லிகா தன்னை விட்டு பிரிந்து செல்ல முருகேசன்தான் காரணம் என எண்ணிய மாணிக்கம், முருகேசனுடன் தகராறு செய்துள்ளார். இருப்பினும் முருகேசன் தொடர்ந்து மல்லிகாவுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முருகேசன் நைனாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மாணிக்கம், முருகேசனை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முருகேசனை சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com