

களக்காடு:
உலக தண்ணீர் தினத்தையொட்டி களக்காடு நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட கலெக்டருக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று கையெழுத்திட்டனர்.