மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்

மருத்துவமனை கட்டிட தீ விபத்து குறித்து விசாரிக்க வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்
Published on

சென்னை,

மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திண்டுக்கல் மாநகரின் திருச்சி சாலையில் இருந்த தனியார் மருத்துவமனையில் நேற்று (12.12.2024) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் மரணமடைந்தனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மின் சாதனம் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்ட நோயாளர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாடி கொண்ட மருத்துவமனை கட்டிடம் விபத்து கால நெருக்கடிகளை எதிர் கொள்ளும் வசதியும், விபத்து கால தடுப்பு சாதனங்கள் எளிதில் கையாளும் வசதியும் இருந்ததா என்பதை விசாரிக்க வேண்டும். விபத்தில் மரணமடைந்த குடும்பங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பங்களுக்கு, மருத்துவமனை நிர்வாகமும், அரசும் உரிய இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com