காவலாளி தற்கொலை

நெல்லையில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவலாளி தற்கொலை
Published on

பேட்டை:

நெல்லை பேட்டை பங்களா தெருவை சேர்ந்தவர் முத்துவேல். இவருடைய மகன் ராமசுப்பிரமணியன் (37). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (35), கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராமசுப்பிரமணியன் தற்போது பேட்டையில் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தத்துடன் இருந்து வந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com