தேவையில்லாத அரசியலை சீமான் கையில் எடுக்கிறார் - தொல்.திருமாவளவன் பேட்டி

சமூகநீதி அரசியல் பேசும் மண்ணில், தேவையில்லாத அரசியலை சீமான் கையில் எடுக்கிறார் என்று தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
தேவையில்லாத அரசியலை சீமான் கையில் எடுக்கிறார் - தொல்.திருமாவளவன் பேட்டி
Published on

மதுரை,

மத்திய அரசு இயற்கை மருத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையிலும் இயற்கை மருத்துவத்திற்கான பிரிவை சேர்க்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 9 மாவட்டங்கள் என்றாலும் இந்த முடிவுகள் ஒவ்வொரு கட்சியின் பலத்தை காட்டியுள்ளது. அ.தி.மு.க. சரிவை சந்தித்துள்ளது.

தி.மு.க.வின் 4 மாத நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றாக இந்த வெற்றி உள்ளது. அரசியல் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொதுமக்கள் அங்கீகரித்துள்ளார்கள்.

சீமான்

சமூக நீதி அரசியல் பேசும் மண்ணில் தேவையில்லாத அரசியலை சீமான் கையில் எடுக்கிறார். இதை நான் ஏற்கனவே சீமானுக்கு சுட்டிக்காட்டி உள்ளேன். ஆர்.எஸ்.எஸ்.காரர்களே, சீமான் எங்களுக்கானவர் என்று கூறுவது போல் அவரின் செயல்பாடுகள் உள்ளன.

மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்றுவது கடினம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. 2024-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதை தடுக்க எதிர்க்கட்சிகள் ஒண்றிணைய வேண்டும். சசிகலா அரசியல் வருகை என்பது அவரது தனிப்பட்ட உரிமை. அவரது விருப்பம். அது குறித்து கருத்து சொல்ல எதுவுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com