குடோனில் பதுக்கி வைத்திருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வாலாஜாவில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
குடோனில் பதுக்கி வைத்திருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ரபீக் நகரில் உள்ள தனியார் குடோனில் ரேஷன் அரிசி பதுங்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பறக்கும் படை தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று 220 மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com