புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

ஓச்சேரியில் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
Published on

காவேரிப்பாக்கத்தை அடுத்த ஓச்சேரி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்கப்படுகிறதா என சோதனை செய்தனர். அப்போது ஓச்சேரி சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த கடையில் இருந்து 10 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் சின்னப்பன் (42) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com