

சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி, சிவி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அரசியல் விமர்சகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அமைச்சர் ஜெயக்குமார் அறையில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.