கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புகளுக்கு செந்தில் பாலாஜியே காரணம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புகளுக்கு செந்தில் பாலாஜியே காரணம் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
Published on

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' யாத்திரை நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றுள்ளார். இந்த விழாவில் உரையாற்றிய நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி. பாஜக அனைத்து மத விழாக்களிலும் கலந்துகொள்கிறது. முதல்-அமைச்சர் போலியான மதச்சார்பின்மையை கடைபிடிக்கிறார். திமுக கூட்டணி என்பது போலியான கூட்டணி.

கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்புக்கு செந்தில் பாலாஜியே காரணம். உடனடியாக உடற்கூராய்வு செய்யப்பட்டதற்கு செந்தில் பாலாஜிதான் காரணம். செந்தில் பாலாஜியை காப்பாற்றவே கரூருக்கு இரவோடு இரவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

ஒரு குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய போலியான கூட்டணியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அமித்ஷா உருவாக்கியது ஆட்சி மாற்றத்திற்கான கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com