தொடர் பைக் திருட்டு: 4 இளஞ்சிறார்கள் உட்பட 5 பேர் கைது; 7 பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை, கன்னியாகுமரி பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.
தொடர் பைக் திருட்டு: 4 இளஞ்சிறார்கள் உட்பட 5 பேர் கைது; 7 பைக்குகள் பறிமுதல்
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நாகர்கோவில் தக்கலை, கன்னியாகுமரி பகுதிகளில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. இந்த புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில் நாகர்கோவில் உட்கோட்ட டி.எஸ்.பி. சிவசங்கரன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்காண்டனர். அதில் இந்தத் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது திருநெல்வேலி மாவட்டம் கோட்டையடி பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் மாரியப்பன் (வயது 22) மற்றும் நான்கு 18 வயதிற்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் பேலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்குகள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com