பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்களில் 75 மனுக்களுக்கு தீர்வு

பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்களில் 75 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்களில் 75 மனுக்களுக்கு தீர்வு
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம்கள் நேற்று நடந்தது. பெரம்பலூர் தாலுகாவிற்கு கல்பாடியில் நடந்த முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பால்பாண்டி தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுகாவில் வாலிகண்டபுரத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனித்துணை ஆட்சியர் சரவணன் தலைமையிலும், குன்னம் தாலுகாவில் வடக்கலூரில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சங்கர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகாவில் செட்டிகுளத்தில் உதவி ஆணையர் (கலால்) ஷோபா தலைமையிலும் நடந்தது. முகாம்களில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 75 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com