சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பாலத்துக்கு பாதிப்பு வரக்கூடாது - எச்.ராஜா

சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பாலத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு வரக்கூடாது என எச்.ராஜா கூறியுள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தால் ராமர் பாலத்துக்கு பாதிப்பு வரக்கூடாது - எச்.ராஜா
Published on

கடலூர்,

கடலூரில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.வினர் அவர்களின் நலனுக்காக சேதுசமுத்திர திட்டத்தை பற்றி பேசி உள்ளனர். இதற்கு முன்பு ரூ.27 ஆயிரம் கேடி செலவாகும் என்று கூறிய நிலையில், தற்போது ரூ.1 லட்சம் கேடி செலவாகும் என்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டுக்கு என்ன மிச்சமாகும் என்பதை ஆராய வேண்டும்.

இத்திட்டத்திற்காக முதலில் நிபுணர் குழு அமைத்து, அத்திட்டம் சாத்தியமா என முடிவு செய்ய வேண்டும். இத்திட்டத்தால் ராமர் பாலத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு வரக்கூடாது.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து வருகிற 31-ந் தேதி கூடும் பா.ஜ.க. மாநில மையக்குழுவில் தான் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com