உயிர்பலி வாங்கும் கழிவுநீர் தொட்டிகள் - மேலும் ஒரு தொழிலாளி சடலமாக மீட்பு

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் மேலும் ஒரு கட்டிட தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
உயிர்பலி வாங்கும் கழிவுநீர் தொட்டிகள் - மேலும் ஒரு தொழிலாளி சடலமாக மீட்பு
Published on

கரூர்,

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் மேலும் ஒரு கட்டிட தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

கரூரை அடுத்த சுக்காலியூர் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய மோகன்ராஜ், ராஜேஷ்குமார் மற்றும் சிவகுமார் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் கட்டிட மேஸ்திரி கார்த்திக் மற்றும் வீட்டின் உரிமையாளர் குணசேகரன் ஆகியோர் மீது தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகுமாருடன் பணிக்கு சென்ற கோபால் என்பவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதே கழிவு நீர் தொட்டியில் இருந்து கோபாலின் உடல் மீட்கப்பட்டுள்ளது

X

Daily Thanthi
www.dailythanthi.com