

மதுரை,
மதுரை வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக பந்தல்குடி வாய்க்காலில் ரூ.2.50 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மதுரையில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மற்றும் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் ஆகியவை நிறைவு பெற்ற பின்னர், வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலுமாக நிறுத்தப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உறுதியளித்துள்ளார்.