15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சாகும்வரை சிறை தண்டனை விதிப்பு

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 லட்சத்து ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சாகும்வரை சிறை தண்டனை விதிப்பு
Published on

சென்னை,

சென்னையில் வீட்டுவேலை செய்துகொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய நபருக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இதன்படி சிறுமியை வன்கொடுமை செய்த அசோக்நகரை சேர்ந்த பால்ராஜுக்கு போக்சோ நீதிமன்றம் சாகும் வரை சிறை தண்டனை விதித்தது.

சிறுமிக்கு வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பால்ராஜுவுக்கு சாகும் வரை சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் 2020ம் ஆண்டு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com