சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் முதியவர் கைது

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் கபூர் (வயது 64). இவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணமல்லி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்துல் கபூரை கைது செய்தார். பின்னர் அவரை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





