பெண்ணுக்கு பாலியல் தொல்லை

பெண்ணுக்கு பாலியல் தால்லை கொடுத்த முதியவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெண்ணுக்கு பாலியல் தொல்லை
Published on

ராஜபாளையம்,

ராஜபாளையம் செண்பகத்தோப்பு ரோடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தலைமலை (வயது 60). கூலி தொழிலாளி. இவர் 29 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண்ணின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com