சிவன் கோவில்களில் சனி பிரதோஷ விழா

சிவன் கோவில்களில் சனி பிரதோஷ விழா
சிவன் கோவில்களில் சனி பிரதோஷ விழா
Published on

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் அமைந்துள்ள காசி விஸ்வநாதருக்கு சனி பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காசி விஸ்வநாதர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இதேபோல் கிணத்துக்கடவில் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சிவலோகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனி பிரதோஷ விழாவையொட்டி சிவலோகநாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், கரும்புச்சாறு எலுமிச்சைச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிவலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் கோவில்பாளையம் காளியண்ணன் புதூரில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com