குட்கா விற்ற கடைக்காரர் கைது

குட்கா விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
குட்கா விற்ற கடைக்காரர் கைது
Published on

ஆம்பூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியில் நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெட்டிக்கடை நடத்தி வரும் செந்தில்குமார் (வயது 40) என்பவர் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்றது தெரிய வந்தது. அவரது கடையில் இருந்த 450 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com