வடுவூர், கோவில்வெண்ணி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

வடுவூர், கோவில்வெண்ணி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வடுவூர், கோவில்வெண்ணி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
Published on

மன்னார்குடி உதவி செயற்பொறியாளர் (புறநகர்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வடுவூர் மற்றும் கோவில்வெண்ணி ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான வடுவூர், சாத்தனூர், நெய்வாசல், புள்ளவராயன் குடிக்காடு, காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலப்பூவனூர், நத்தம், ஆதனூர், சோனாப்பேட்டை, கொட்டையூர், அம்மாப்பேட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, கிளியூர், முனியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com