தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை

சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பெண் இறந்ததால் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
Published on

தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி மலர்மதி (வயது 38). இவரை சிகிச்சைக்காக குடும்பத்தினர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சுயநினைவு இழந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மலர்மதி உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடைய உறவினர்கள் தர்மபுரியில் ஏற்கனவே சிகிச்சை அளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை முன்பு நேற்று திரண்டனர். அவர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் மலர்மதி இறந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் விரைந்து வந்து முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com