திருவாசகம் முற்றோதுதல்

திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.
திருவாசகம் முற்றோதுதல்
Published on

கந்தர்வகோட்டையில் ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதுதல் நடைபெற்றது. இதில் காரைக்குடி, பட்டுக்கோட்டை, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை சுற்று வட்டார பகுதியில் உள்ள சிவனடியார்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டு காலை முதல் மாலை வரை திருவாசகம் பாடினார்கள். இதில் கலந்து கொண்ட சிவனடியார்களுக்கு காலை உணவும், மதிய உணவும் சிவனடியார்கள் சார்பாக வழங்கப்பட்டது. இதில் தன்னார்வத்தோடு கலந்து கொண்ட சிவனடியார்களுக்கு திருவாசக புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை பகுதி சிவனடியார்கள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com