பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரித்தது.
பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
Published on

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 249 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து, நேற்று 2 ஆயிரத்து 955 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.534-க்கு விற்பனையானது. நேற்று கிலோவிற்கு ரூ.72 அதிகரித்தது. அதன்படி அதிகபட்சமாக ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.606-க்கும், குறைந்தபட்சமாக ரூ.225-க்கும், சராசரியாக ரூ.465.12-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.13 லட்சத்து 74 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு வர்த்தகம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com