மூழ்கி வரும் அடிபம்பு

சிவகாசி அருகே அடிபம்பு மூழ்கி வருகிறது.
மூழ்கி வரும் அடிபம்பு
Published on

சிவகாசி-விருதுநகர் ரோட்டில் திருத்தங்கல் பகுதியில் தண்ணீர் பிரச்சினையை சரி செய்ய அடிபம்பு அமைக்கப்பட்டது. தற்போது அந்த அடிபம்பு 3 அடி தரையின் கீழ் சென்று விட்டது. சாலை ஓரத்தில் உள்ள அடிபம்பால் இந்த பகுதியை கடந்து செல்பவர்கள் இதன் மீது மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com