சிவகங்கை: மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பார்வையாளர் உயிரிழப்பு

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சிவகங்கை: மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பார்வையாளர் உயிரிழப்பு
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் கண்டுப்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. மஞ்சுவிரட்டு போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்க்கப்பட்டன. இந்த காளைகளையும் மாடுபிடி வீரர்கள் அடக்கினர். அவற்றில் சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. பல காளைகள் பிடிபடாமல் ஓடின.

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த போட்டியை பார்க்க வந்திருந்த கொரட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் (வயது 70) என்பவரும் மாடு முட்டி பலத்த காயம் அடைந்து சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com