கொழும்பில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் தங்கம் சிக்கியது

கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.26 லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட 2 இலங்கை பெண்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கொழும்பில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் தங்கம் சிக்கியது
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்து இறங்கும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்து இறங்கிய 2 இலங்கை பெண்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். இதையடுத்து முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்காததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

தங்கம் பறிமுதல்

அப்போது, 2 பெண்களும் தங்களது உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 516 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 2 பெண்களையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர்? கடத்தலில் பிண்ணனியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து அவர்களிடம் துருவி, துருவி விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com