பள்ளியில் சமூக அறிவியல் மன்றம் தொடக்கம்

பள்ளியில் சமூக அறிவியல் மன்றம் தொடங்கப்பட்டது.
பள்ளியில் சமூக அறிவியல் மன்றம் தொடக்கம்
Published on

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் மன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் ஆகிய 3 மன்றங்களின் தொடக்க விழா முப்பெரும் விழாவாக நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியை செல்வராணி வரவேற்றார். விழாவில் 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய நாடகம் மற்றும் தொன்மை பாதுகாப்பு பற்றிய நாடகத்தை நடத்தினர். மேலும் புராதன சின்னங்கள், வரலாற்று ஆளுமைகள் மற்றும் வாக்காளர்களின் உரிமைகளும், கடமைகளும் ஆகிய தலைப்புகளின் கீழ் மாணவ, மாணவிகள் பேசினார்கள். முன்னதாக சமூக அறிவியல் ஆசிரியை தமிழ் இலக்கியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கணித ஆசிரியர் செல்வமுருகன் மற்றும் ஆங்கில ஆசிரியை சத்தியப்பிரியா ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் ஆசிரியர் கலையரசன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com