தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது : அரசியல் செய்வது ஏற்க முடியாதது - ஜெயக்குமார்

தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்க முடியாதது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது : அரசியல் செய்வது ஏற்க முடியாதது - ஜெயக்குமார்
Published on

சென்னை,

சென்னை நந்தம்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது ஏற்க முடியாதது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஆலோசிக்கப்பட வேண்டிய ஒன்று . தமிழகத்தில் நீர் மேலாண்மை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

மீன்பிடி தடைக்காலத்தை வேறு மாதங்களுக்கு மாற்ற வேண்டும் என மீனவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும். மீன்பிடி தடைக்காலத்தை மாற்றுவது குறித்து அனைத்து கடலோர மாநிலங்களுடன் விவாதிக்க வேண்டும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com