விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம் - சீமான் பேட்டி

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்
விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம் - சீமான் பேட்டி
Published on

காரைக்குடி,

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம் . மீனவர்கள் கைது குறித்து அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும்.

அண்ணாமலை பேச வேண்டியதெல்லம் ஆளுநர் பேசி விடுவதால் அண்ணாமலைக்கு குழப்பம்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ய நீங்கள் யார்? .ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்தது மக்களாட்சிக்கு விரோதமானது.

 விஜய் அரசியலுக்கு வந்துவிடுவாரோ என்று சிலருக்கு பயம். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com