தந்தையை கொன்ற மகன் கைது

சேதுபாவாசத்திரம் அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு தந்தையை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தந்தையை கொன்ற மகன் கைது
Published on

சேதுபாவாசத்திரம்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கூடலிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி (வயது 50). விவசாயி. இவரது மனைவி எலிசபெத். இவர்களது மகன் ஆரோக்கிய அருள்வில்டன்ஸ்(27). ராபர்ட்கென்னடி தினமும் மது குடித்துவிட்டு வந்து குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவும் ராபர்ட்கென்னடி, மனைவி எலிசபெத்திடம் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு செய்துள்ளார். அவர்களை மகன் ஆரோக்கியஅருள்வில்டன்ஸ் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது ராபர்ட்கென்னடி மகனை கீழே பிடித்து தள்ளியுள்ளார்.

தந்தை கொலை

மேலும் தாய்-தந்தையிடையே பிரச்சினை நீண்டு கொண்டே சென்றதால் ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய அருள்வில்டன்ஸ் அருகில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து வந்து ராபர்ட்கென்னடியின் தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராபர்ட்கென்னடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியஅருள்வில்டன்சை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com